அழகு மயில்!

Su.tha Arivalagan
Jun 09, 2026,11:07 AM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி


பொன் பட்டு பீலி விரித்து 

மென் கழுத்து நீண்டு நிமிர்த்து 


கொஞ்சும் கொண்டை கொஞ்சி ஆர்த்து

விண் சொரியும் சாரலில் மேனி சிலிர்த்து 


ஆனந்தக் கூத்தாடும் அழகு மயில்!

நளினத்தின் இலக்கணம் பெண்மை...


என்ற வரையறையை  மாற்றி அமைத்த ஆண் மயில்..


தேசியப்பறவையான என் தேச மயில் !

தரணி போற்றும் தங்க மயில்!!!


பாவலர் பாடிடும் பட்டு மயில் !

நாவலர் நவில்ந்திடும் நல்ல மயில்!




ஒயிலாய் மயக்கும் ஒய்யார மயில் !

சிலுப்பி சிரிக்கும் சிங்கார மயில்!


கோவிலில் குடியிருக்கும் கோல மயில்!

முருகனின் முன்னிருக்கும் முத்து மயில் !


கவி பாட வரி கொடுத்த என் கானமயில்...

பொன் கான‌மயில்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).