மடிசாரு புடவையிலே.. மனசெல்லாம் பூரிக்க!
May 29, 2026,04:32 PM IST
- இரா. மும்தாஜ் பேகம்
மடிசாரு புடவையிலே!
மனசெல்லாம் பூரிக்க
மன்னவனின் வருகைக்குக்
காத்திருக்கும் வஞ்சியவள்
தூது சென்ற புறாக்களிடம்
சேதி கேட்கும் பேரழகை
வார்த்தைகளில் எழுதிடவே கடலளவு மை வேண்டும்
கார் வானின் தாள் வேண்டும்
வஞ்சியின் பேரழகை வார்த்தைகளில் வடித்திட
வாலியும் நானில்லை
கண் பேசும் பேரழகை
கவிதையில் வடித்திடவே கவியரசும் நானில்லை
உள்ளத்தின் உணர்ச்சியை உலகுக்கு காட்டிய
உனதருமை தோழியடி!
(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)