ஏன் யோசி.. எதற்காக எழுது.. எப்படி கண்டுபிடி.. மூடனாக இல்லாமல் .. அறிஞனாக மாறு!

Su.tha Arivalagan
Feb 28, 2026,01:38 PM IST

- ரதி தேவி


விண்ணின் அழகை ரசித்தவன் 

கவிஞன் 


விண்ணையே தொட

செய்தவன் 

அறிஞன்.


ஆப்பிளைச் சுவைத்தான்

மனிதன் 

அது விழுவதன் காரணம் 

ஈர்ப்பே என்றான்

அறிஞன்...




கிரகங்கள் தான்

வாழ்வு என்றான்

மூடன் 

கிரகங்களையே 

ஆராய்ந்தவன்

அறிஞன் 


மூடர்களுக்கே முட்டுக்கட்டை 

வைத்தான்

அறிஞன்...


இருட்டான

உலகிற்கே 

ஒளி தந்தவன் 

அறிஞன்...


உலகத்தையே 

உள்ளங்கையில் 

அடக்கியவன்

அறிஞன்......


அறிவியலை போற்று

அறிஞர்களை பின்பற்று

உலகை மாற்று....


இளைஞனே மீண்டும் 

எழு

உனக்காக 

ஆயிரம் ஆயிரம் 

காத்திருக்கிறது

கண்டுபிடி


ஏன் யோசி

எதற்காக எழுது

எப்படி கண்டுபிடி


மூடனாக இல்லாமல் 

அறிஞனாக

மாறு......


தேசிய அறிவியல் தினம் 

வாழ்த்துக்கள்