அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
- பா.சுமதி சரவணன்
என்னுயிர் தமிழே
எனக்கு அம்மா முதலில் அறிமுகம் என்றால்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே
என்னை உனக்கு தருவேன் தமிழே
ஏனெனில் நீ என் உயிர் மூச்சு.
என் உயிர் தமிழே.
நீ நீ நீ என் அறிவு பசிக்கு விருந்து.
நீ என் உள்ள கிடக்கைக்கு மருந்து.
நீ என் உயிர் தமிழே.
தமிழுக்கு அமுதென்று பெயர் என்று சொல்வார்கள்.
அமுதம் என்றால் வாழ வைக்கும் தன்மையை கொண்டது என்பது பொருள்
அதே போல் தான் என் தமிழும்
என் உயிர் தமிழும் என்றும் என்னை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது .
இனி தமிழ் மெல்ல சாகும் என்றார் பாரதி .
உனக்கு தமிழுக்கு அழிவு கிடையாது என்பதை தான் அப்படி உரைத்தார் அவர்.
இந்த உலகம் உலகம் இருக்கும் வரை நீ இளமையோடு இருப்பாய் என் உயிர் தமிழே.
ஏனென்றால் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி.
என்னுயிர் தமிழே..
கல் வந்துவிட்டது அது நொறுங்கி தான் மண் வர வேண்டும்
அதற்கு முன்னேயே தமிழ் வந்துவிட்டது.
அத்தகைய சிறப்பு பெற்ற என் உயிர் தமிழே ...
என்றும் நிலைத்து நின்று வாழ்வாய். வாழ வைப்பாய்...
வளர்க தமிழ்
வாழ்க தமிழ்
கவிதை வடித்த பா.சுமதி சரவணன்.M.sc( yoga )NIIT, சென்னை. திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ்ச் சேவை புரிந்து வருகிறார்.