மின்னல்வெட்டு தாங்க முடியாமல்.. இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை.. மழையே..!

Su.tha Arivalagan
Nov 17, 2025,03:55 PM IST

- கலைவாணி ராமு


மன்னில் வாழும் உயிர் இனத்துக்கு எல்லாம்

ஆக்சிஜன் மழையே....

மரம் நட்டுப் பாதுகாத்தால் மனம் கமழும் மழையே.....

கார்மேகம்

வெட்கப்பட்டு 

சிந்தும் துளி

மழையே.....

கருனைக் கடல் கொந்தளித்தால் வருவது 

மழையே....

மின்னல் வெட்டு தாங்க முடியாமல் 




இடி முழக்க சத்தம் இட்டு பிரசவித்த குழந்தை மழையே..

நிறம் இல்லை,மனம் இல்லை, சுவை இலலை....

ஆனால் நீ இல்லையேல் உலகம் இல்லை மழையே......

மன்னர் ஆட்சி சிறந்தால் 

மும்மாரி பொழிவாய் மழையே.....

மக்காத குப்பைகளால்

உருமாறி விட்டாய் நீயே.....

செய்த தவறுக்கு பிராயசித்தம்

செய்வோம் இனி....

மரக்கன்றுகள் நடுவோம் 

தயவு காட்டுவாய் நீயே மழையே....

விவசாயம் செழிக்க உற்ற நன்பன் நீயே மழையே.....

மயிலின் தோகை விரித்த நடனம் 

உன் வருகையை உனர்த்தும் மழையே......

கானும் இடமெல்லாம் 

கான்கிரீட் சாலைகள் சேமிக்க இடமில்லாமல்

கடலில் கலக்கிறாய் மழையே....

உன்னை சேமிக்க மழைநீர் 

தொட்டிகள் அமைப்போம்

எல்லா வீடுகளிலும்....

மரம் வளர்ப்போம்....

மழை பெருவோம்......


(புதுச்சேரியைச் சேர்ந்த கலைவாணி ராமு கவிஞர், கட்டுரையாளர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)