சிந்தனைச் சிதறல்.. தவறியவர்களை.. கருணையோடு கண்டியுங்கள்!
- அ. தாமஸ்
தவறியவர்களைத் தண்டிக்கும் முன் கருணையோடு கண்டியுங்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் தன் கீழே பணி செய்பவர்களை பொது வெளியில் கண்டித்து தன் மதிப்பை உயர்த்த நினைக்கின்றோம். அதே நேரத்தில் அவர்கள் நிலையை சற்று யோசியுங்கள் அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பமும் உறவுகளும் உணர்வும் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
கடமையில் தவறுபவர்களைக் கருத்தாய் தண்டிப்பதை விட கருணையோடு கண்டிப்பது உயர்வானது. தண்டித்தல் தவறச்செய்யும் கண்டித்தலே தவறைக் களையச் செய்யும்.
பொதுவெளியில் தண்டிப்பதையும் கண்டிப்பதையும் விட தனி அறையில் கருணையோடு கண்டிப்பது அவர்களின் தவறைக் குறைத்து நம் மீது கொண்ட பேரன்பால் பொறுப்பை உணர்ந்து பணி செய்ய வழி செய்யும்.
அறியாமல் தவறியவர்களை அரவணைத்து அறிவுரை கூறுங்கள். அறிந்தே தவறுபவர்களை அடையாளம் கண்டு தவறையும் அதன் விளைவையும் விளக்குங்கள். புரிந்தால் தொடரட்டும் இல்லையே இவ்விடம் களையட்டும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)