சிந்தனைச் சிதறல்.. அதீத அன்பு தன்னிலை மறக்கச் செய்யும்!
Aug 14, 2026,05:02 PM IST
- அ. தாமஸ்
சிலர் உள்ளத்தில் உதிக்கும் அளவற்ற அன்பைக் கூட அளந்தே வெளிப்படுத்துகிறார்கள். அதற்கு, "அதீத அன்பு தன்னிலை மறக்கச் செய்யும்" என்றே காரணம் கற்பிக்கிறார்கள்.
உள்ளத்தின் ஆழத்தில் உதித்து மறைக்கப்படும் அன்பு கூட மறுக்கப்பட்ட அன்புதான். ஆம், வெளிப்படுத்தப்படாத உணர்வுகள் யாவும் பயனற்றவைதானே!
தேவைக்குக் கிடைக்காத யாவும் அந்நிலையில் பயனற்றதே; பசியுற்றோரின் பசி தீர்க்கும் பழஞ்சோறும் பெருஞ்சோறே; தாயின் அன்பை வெறுக்கும் மகவும், மகவின் அன்பை மறுக்கும் தாயும் மனிதநேயச் சிதைவின் அடையாளங்களே. எனவே கிடைக்காத அன்புக்காக ஏங்கித் தேங்கி நிற்பதை விட, கிடைக்கும் அன்பைக் கொண்டு ஓங்கி நிற்போம். கிடைப்பதைப் பெறுவோம், கிடைக்காதவருக்கும் பகிர்வோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)