குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன்..யுபிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார் அஜய்குமார்‌.‌.!

Manjula Devi
May 14, 2025,11:50 AM IST

டெல்லி: யுபிஎஸ்சி தலைவராக இந்திய பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார்  நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(UPSC )தலைவராக பதவி வகித்து வந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதை அடுத்து, யுபிஎஸ்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. 




இந்த நிலையில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலின்படி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இந்திய பாதுகாப்பு துறையின் முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யுபிஎஸ்சி தலைவராக ஆறாண்டுகள் அல்லது 65 வயது பூர்த்தி அடையும் வரை பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது யுபிஎஸ் தலைவராக நியமிக்கப்பட்ட அஜய்குமார், முன்னதாக கேரளா கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற குடிமைப்பணி அதிகாரியாகவும், 2019 முதல் 2022 வரை பாதுகாப்பு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.