பாசமும் நேசமும் பகிர்ந்த நினைவுகள் மனதில் இனிய நினைவுகளாய்!

Su.tha Arivalagan
Aug 03, 2026,12:33 PM IST

- அமிர்தம் ரமேஷ்


அறிமுகம்  

இல்லாமல் 

ஆறில் 

இணைந்தோம்


ஆதரவுடன் 

பழகி நட்பு கொண்டோம்


இதயங்களுக்குள் அன்பை ஆழமாய்

நிறைத்தோம்


விரல்கள் கோர்த்து

ஆனந்தமாய் விளையாடினோம்


குட்டிக் குட்டி கதைகள் பேசி மகிழ்ந்தோம்




உணவுகள் 

நிறைவாய் பகிர்ந்து உண்டோம்


இன்பத்தில் இணைந்து

சிறுபிள்ளைகளாய்

குதித்தோம்


சோகத்திலும் இணைந்து ஆறுதல்

பகிர்ந்தோம்


படபடக்கும் பட்டாம்பூச்சிகளாய் வலம் வந்தோம்


எத்தனை வண்ணங்கள் 

நம்மில் கண்டோம்


அத்தணையிலும் வண்ணங்கள் 

மிளிரக் கண்டோம்


கல்வி என்னும் பெருங்கடலில் மூழ்கினோம்


அறிவென்னும் முத்தை ஆசிரியர்களிடம் பெற்றோம்


பாசமும் நேசமும் பகிர்ந்த 

நினைவுகள்


மனதில் இனிய நினைவுகளாய் நிறைத்தோம்


நெஞ்சம் 

கணக்கிறது

விழிகளின் ஓரம்


கண்ணீர்த் 

துளிகள்

எட்டிப் பார்க்கிறது


உறங்கினாலும் உறங்கிப் 

போகாத நம்

அழகிய 

பள்ளிக் கால நினைவுகளை


மீட்டிப் பார்த்த

மகிழ்வு


சிந்தனை இன்று சிறகுகளாக பறக்கிறது


பள்ளி கால நினைவுகள்

அழகானது


தோழிகளுக்காக

நட்பு 

கவிதையொன்று


நினைவுகள்

இதயத்துள்

நித்தம் 

புது மலராய்

மலரும்


நம் பள்ளி பயின்ற நாட்கள் 

கடந்தாலும்


நினைவுகளை நினைக்கும் 

நிமிடம்


சிறகுகள் இன்றி

விண்ணைத் தொடலாம்


சுவாசம் 

நிறுத்தி

ஆழ்கடல் 

தொடலாம்


தோழிகுரல் 

செவி சேர

வலிகள் கூட தொலைந்து 

போகும்


நட்பு மலர 

ஒரு சிறு

புன்னகை போதும்


துவண்டு 

விழும்போது

நட்பென்னும் மலர்க்கரம்

தாங்கிபிடிக்கும்


உயிர்வலியை உணரும்

தருணம்

உரிமையுடன்

உடன் நின்று தோள் தந்து ஆறுதல் தரும்🌹


தொலைவில்

இருந்தாலும்

கைபேசி ஆறுதலே

கோடி...கோடி...

பலம் தரும்


மனதிற்க்கு மகிழ்வைத்தரும்

நலம் சிறக்கவேண்டி

மன்றாடும்


ஆண்டவனை 

தினம் தினம்

வேண்டி நிற்கும்


இரத்த பந்தம் இல்லை...

உறவின் சொந்தம்

இல்லை...

உணர்வுப்பூர்வமாய்

உலம் மகிழ உதிப்பது

நட்பூ


நட்பூ வரும் வரை

இருக்கும் 

ஏக்கம்


வந்த பின் மாறும்

ஆனந்தமாக


சுவாசமாய் 

மாறும் நட்பூ


சுவாசம் 

உள்ளவரை

சுகம்தரும்