வரமாக வந்தவள் நீயடி!

Su.tha Arivalagan
Jul 09, 2026,01:02 PM IST
- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்

வானிலை
அறிக்கையில் கூட
அறிவிக்கவில்லையே
ஏன் இந்த
திடீர் மாற்றம்..!

வான் மேகங்கள்
பரவசமாக
பாய்ந்தோட...!
கண் கொள்ளாக்
கடல் கொந்தழிக்க...!

அலைமேல் அலை 
விடாது ஆர்ப்பரிக்க...!
சற்றே
சிந்தித்தேன்...!

ஆஹா
வியந்தேன்...!
என்ன அழகு
விக்கித்தேன்...!

என்னவளை
கண்டதால்
வந்த மாற்றங்களாயிது...!



அவளை நான்
நோக்க
வெட்கத்தில்
அவள் நிலம் நோக்க...!

கூந்தல் காற்றில்
அலைபாய
இருமலரின்
வாசம் நாசி தழுவிச்செல்ல...!

இதுவரை கண்டதில்லை
இப்படி ஓர்
அதிசயத்தை...!

அதனால் தானோ
இயற்கையும்
இதமாக  
இடம் மாறுகிறது...!

பொன்னும் வேண்டாம் 
மணியும் வேண்டாம்
உன் 
புன்னகைப் போதுமடி...!

என்னவள்
எனக்கானவள்
என்னுயிரானவள்
இதயத்தை
இதமாக தந்துவிட்டால்
உயிராய்
எனக்குள்
நுழைந்து விட்டாள்

தாய்போல் உன்னை
தாங்கிடுவேன்
தாரமாக வந்திடடி
தவப்பயனை
இருவரும்
சுகமாக வாழ்ந்திடலாம்