பிளஸ் டூ தேர்வு முடிவுகள்.. நாளை மறுநாள் வெளியாகிறது.. ஆர்வத்தில் மாணவர்கள்!
சென்னை: பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே மே 8ஆம் தேதி வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொது தேர்வுகள் கடந்த, மார்ச் 3 தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.
இதனையடுத்து ஏப்ரல் ஒன்றாம் தேதி பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கி தேர்வு முடிவுகள் வெளியீடு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனையடுத்து பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதி வெளியாகும் எனவும், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியீடு பணிகள் விரைவாக நிறைவடைந்த நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிட தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் அதாவது மே எட்டாம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 8-ம் தேதி காலை 9 மணிக்கு + 2 ரிசல்ட் வெளியிடப்படும்- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.