விநாயகா! எனக்கென் குறை.. அழகிய சிங்கரின் என்பா!

Su.tha Arivalagan
Sep 17, 2026,10:42 AM IST

பூலோகத்தில் யாவருக்கும் பொன்னைய தெய்வமிது.

பேராதரவாய்  மாதா பிதா குரு வென

என் மனதில் நீர் குந்தியிருக்க;

விநாயகா! எனக்கென் குறை?


நல்லோசை தரும் வாணி,  நீர்

தலை அசைக்க,

நாவிலே அமர்ந்தாள்!

நான்முகனும் தலையெழுத்தை மாற்றி   எழுத;

விநாயகா! எனக்கென் குறை?





செந்திருவும் செல்லாதிருப்பாள்; 

என்னில்லம்  விட்டு.

செஞ்சடையான் பாகத்தாளும் 

பிரியாதிருப்பாள்; என்னிடம்.

வெண்மலராள் குடியிருப்பாள் நின் அருளால்.

விநாயகா! எனக்கென் குறை


வேண்டாத நினைவுகளை நீ அகற்றிட,

வேண்டும் அத்தனையும் விரும்பியே  தர,

வேறென்ன வேண்டும்; சொல்; நீரே!

விநாயகா!  எனக்கென் குறை?


கடல் கடந்தே நீர் சென்று,
உன் ஆடல் அங்கு   நடத்த;
என் ஆணை உனக்கு; என்றேன்!
விநாயகா! எனக்கென் குறை