ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை.. சுப்மன்கில் கேப்டன்.. இங்கிலாந்து டூருக்கான அணி அறிவிப்பு!

Su.tha Arivalagan
May 24, 2025,05:52 PM IST

மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். அணியில் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இடமளிக்கப்படவில்லை.  அதேசமயம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷனுக்கு இடம் கிடைத்துள்ளது.


இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக ரோஹித் சர்மா தொடர மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ப அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதேபோல விராட் கோலியும் ஓய்வை அறிவித்து விட்டார்.




இந்த நிலையில் தற்போது இந்திய அணியும், புதிய கேப்டனையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் சில ஆச்சரியங்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் இடம் பெறவில்லை. அதேபோல ஷ்ரேயாஸ் ஐயர், சர்பிராஸ் கான், சஞ்சு சாம்சன் என பலருக்கும் இடம் கிடைக்கவில்லை.


மேலும் ரிஷப் பந்த்துக்குப் பதில் பும்ராவை துணை கேப்டனாக அறிவித்திருக்கலாம் என்றும் விமர்சகர்கள் மத்தியில் விவாதம் கிளம்பியுள்ளது. 


இந்திய அணி விவரம்:


சுப்மன் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரேல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சர்துள் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.