மோதல் போல காட்சி படுத்தி மாயம் செய்கிறாய்.. காதல் !
Feb 05, 2026,12:29 PM IST
- பா.பானுமதி
உன்னை கண்டதும்
உண்டானது மயக்கம்
உன்னிடம் சொல்ல
உருவாக்குது தயக்கம்
உன்னில் சுரக்கவில்லையா
நல்இரக்கம்
நீ கண்டுகொள்ளவில்லை எனில்
என்னில் சுணக்கம்
பக்கத்தில் நீ வந்தால்
ஏற்படுகிறது நடுக்கம்
பறந்து போனால்
பட்டு போகிறது உறக்கம்
கோடையில் வரும்
குளிர் தென்றல் நீ
ஆடையில் நடந்து வரும்
அழகு மின்னல் நீ
காதல் நோய் தந்து
காயம் செய்கிறாய்
மோதல் போல காட்சி படுத்தி
மாயம் செய்கிறாய்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)