Tamil Poem: இந்தத் துறவியின் வேஷம் கலைத்தேன்!

Su.tha Arivalagan
Jul 04, 2026,11:47 AM IST

- பாரத்


மதுரை சங்கத்தமிழை 

மொழிபெயர்க்க 

நான் கவிஞனும் இல்லை!


மங்கையின் அங்க அழகை 

வர்ணித்து

நான் எழுதுவது பொய்யுமில்லை!


நிலவின் துகளை 

முக பாகத்தில் கண்டு கொண்டேன் !


புல்லாங்குழல் இசையை

கன்னி குரலோடு கேட்டறிந்தேன்!




இணை சேரும்

செம்மீன்களை 

இதழ் இரண்டில் கண்டுப் பிடித்தேன்!


செந்தாமரை நறுமணமோ

தேகத்தின் வாசனை என்றேன்!


இப்பெண்ணை கண்டவுடன் 

இந்தப் பிறவியில்

மோட்சம் பெற்றேன்!


என் எதிரே கண் அசைத்தவுடன் 

இந்தத் துறவியின் 

வேஷம்  கலைத்தேன்!