தென்றல் பாடும் தாலாட்டு!

Su.tha Arivalagan
Jul 14, 2026,03:05 PM IST

- பாரத்


ஏழை உழைப்பாளி

கொட்டகை வாசலில் 

உறங்கும் வேளையில் 

களைப்பை போக்கும் 


சலவைத் தொழிலாளிக்கு

கதிர் வெப்பமற்ற போது 

ஆறுதலுக்காக 

உடைகளை உணர்த்தும் 




காய்ந்த வயிறு கஞ்சிக்காக 

காலணி தைப்பவன் 

கடும் வெயிலில் கடை விரிக்க

வியர்வையை இலவசமாய் கடத்தும் 


நாத்து நட தாயவள் 

நடு வயலில் நிற்கையிலே  


ஆலமரக்கிளையில் தொட்டிலில் 

மழலை அழும் நேரத்திலே 


மழலை காதில் தாயவள் குரலில் 

தென்றல் பாடும் தாலாட்டு இனிமையாய் இசைக்கும்