கண்ணீர்க்கென்று ஓவியம் இருந்தால் என்னுருவம் போலிருக்கும்!
Jul 28, 2026,03:11 PM IST
- பாரத்
கண்ணீர்க்கென்று
ஓவியம் இருந்தால்
என்னுருவம் போலிருக்கும்
என் இதய ரணங்களை
ஆற்றி விடவே
மௌனம் மருத்துவமாகும்
நடைபாதையில்
கற்களை விடவும்
முட்களை மிதித்தே
நடக்கிறேன் நானும்
தீராத நோய் என்றால்
ஏழைகள் பசியுடன் இருக்கும்
என் நாட்டின் வறுமை ஆகும்
தேசியத் தலைவர்கள்
சிந்திய ரத்தம்
வீணாய் போன
தியாகமாகும்
அந்தக் கடவுளுக்கு
வயிற்றுப் பசி
எடுத்தால்தான்
ஏழை நிலையை
உணர்வான் போலும்