இசையரசி ஜானகி.. நிலவை மேகம் மறைக்கலாம்.. நெஞ்சில் என்றுமே ஒளிவீசும்!
- பாரதிராஜன்
1938 ல் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, உட்பட 17 மொழிகளில் பாடியவர். 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். தேசிய விருது 4முறை, மாநில விருது தமிழகம், ஆந்திரா,கர்நாடகம் மற்றும் கேரளா உள்பட 33 முறை. 2013ல் மத்திய அரசின் பத்மபூஷன் விருது.
ஸ்ரீதேவி,ராதா, ஜெயபிரதா, சுகன்யா &குஷ்பு நடிகைகளுக்கு குரல் கொடுத்தவர். அன்னக்கிளி பாடல் மட்டுமல்ல படமும் பிரபலமாக காரணம்ஆக இந்த இசையரசி தற்போது விண்ணில் பாடச் சென்று விட்டார்
பாடும் நிலா ஜானகி அம்மா இன்னும் நம்ம கூடதான் இருக்காங்க. அவருடைய குரல் இன்னும் நம்ம வானொலியில், நம் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
பாடும் நிலா ஒன்று இருந்தது
தென்னிந்தியா முழுதும் ஒளி வீசியது.
செந்தூரப்பூவே சிரித்தது அவர் குரலில்
மலர்களே மலர்களே மலர்ந்தது அவர் குரலில்
ஒரு குரல் - ஆயிரம் முகம் காட்டியது
காலம் போனாலும் குரல் போகாது
வயது ஆனாலும் இசை மூப்படையாது
டேப் ரிகார்டரில், மொபைலில், நம் நெஞ்சில்
ஜானகி என்றும் பாடிக்கொண்டே இருப்பார்
நிலா மறையாது...
வெறும் மேகம் மறைக்கும் அவ்வளவுதான்
மேகம் விலகியதும் மீண்டும் ஒளி வரும்
அதுபோல ஜானகியின் பாடல் என்றும் நிலைக்கும்
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)