Tamil Short Story: கைபேசி திருடிய சிறுமி!
- பாரதிராஜன்
செல்வி உடல்நிலை சரியில்லாத தன் குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.அந்த சமயத்தில் அவரிடமிருந்த கைபேசி சார்ஜ் போட்டு அழும் குழந்தையைத் தாலாட்டுபாடியபடியே அந்த நிலையில் கண்ணசைந்தார்.
திடீரென நினைவு வந்த வராக கைபேசியைப் பார்க்க சார்ஜர் மட்டுமேபல்லிளிக்க, செவிலியரிடம் புகாரளிக்க, அங்கேயுள்ள சிசிடிவி காமராவில் பதிவுகளை ஆயுவுசெய்ததில் சுமாராக 14வயது சிறுமி கைபேசி திருடியது மற்றும் அடுத்த பெட்டில் இருந்த முதியபெண்மணி வைத்திருந்த ரூ1,500/_தலையணை அடியில் இருந்ததை திருடியதையும் பார்த்து அதிர்ந்த மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவ மனையில் இருந்த டீக்கடையில் டீசாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமியை காவலரிடம் ஒப்படைக்க, அந்த சிறுமி அழுதவாறு தன் கதையைக்கூறினாள்.
மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட, நீதிபதி இளம் சிறார் சிறையில் பரிந்துரை செய்தார்.
நீதிபதியை பரிதாபமாக பார்த்த சிறுமி, ஐயா, நான் திருடியது தவறு, ஆனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? மருத்துவமனையோ அரசு மருத்துவமனை இங்கு எவ்வாறு வரவேண்டும் என்ற நிலை தெரியவே நான் இம்மாதிரி செய்தேன்.
இது ஒரு விழிப்பணர்வு குறும்படம் இதனை யாருக்கும் சொல்லாமல் எடுத்தது எங்களுடைய தவறு. உண்மையில் கைபேசி தொலைத்த அந்த ப்பெண் என் சகோதரி, முதியவள் என்பாட்டி என்றதும் அந்த சமயத்தில் அங்கே வந்த டிஜிபி, இதை என்னிடம் சொல்லி அனுமதி வாங்கினார்கள், நான் மருத்துவமனை டீனிடம் சொல்லி விட்டு இப்போது தான் வருகிறேன் என்றதும் ஆஹா ஆஹா நல்ல விஷயம் என வாழ்த்தினார்கள் அனைவரும்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)