புன்னகையில் வெற்றியைக் கொண்டு வா!
- மீனா கணேஷ்
இனியவனே எழுந்திரு
புலர்ந்திடும் இந்தப் பொழுது
உனக்காகத்தான் . . . .
துணிந்தவனே துணைக்குவா
உன் இடர்களை களைந்து
வீர நடை போட்டு வா . . . .
அன்பானவனே
அதிர்ந்த நடையோடு
அனைத்திலும் எழுந்துவா . . .
நட்பானவனே
அத்தனையிலும்
துணையிருக்கிறேன் வா . . .
புதிதானவனே
புன்னகையில் வெற்றியைக்
கொண்டு வா . . .
தோழனே தோல்வி உனக்கில்லை
தோழமை இன்னும் கிடைக்கும் வா
தோற்காது வா . .
விமர்சிக்க முடியாதவனே
எந்த விமர்சனத்திலும்
அடங்காது உன் வெற்றி
அதனால் இன்னும்
விரைந்து வா . . . .
வரிசை கட்டி நிற்கும்
தீபங்கள் உனக்குள்ளும்
நின்று வெற்றி ஒளியை வீசட்டும்
புத்தொளியாய் புறப்பட்டு வா . . .
இன்னல்கள் நீங்கி
இன்முகத்தோடு வா
தொடரட்டும் உன்
வெற்றிப் பயணம்
தொடர்வேன் நானும் . . . . .
இந்த உலகத்தில் உனை
ஒப்பிட்டு பார்ப்பதற்கு
ஒன்றுமில்லை வா . . . . . !
(திருநெல்வேலியைச் சேர்ந்த மீனா கணேஷ், கவிஞர், சிந்தனையாளர், பாடகர் மற்றும் எழுத்தாளர்)