7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

Meenakshi
Jun 24, 2025,01:07 PM IST

சென்னை: திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி,நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய கடலோரப் பகுதியில் மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் செவ்வாய்க்கிழமை இன்று முதல் ஜூன் 29ம் வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூன் 24ம் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி,நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.