விடிய விடிய வச்சு செஞ்ச ஆவணி மழை.. அடிச்ச அடில.. மெட்ராஸே ஆடிப் போயிருச்சுங்க!

Su.tha Arivalagan
Aug 23, 2025,10:56 AM IST

சென்னை: சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் நேற்று இரவு முதல் காலை வரை விட்டு விட்டுப் பெய்த கன மழையால் ஊரே குளிர்ந்து போய்க் கிடக்கிறது.


ஆவணி மாதத்தில் இப்படி விட்டு வெளுப்பதெல்லாம் ஒரு அரிய சம்பவம்தான். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மட்டுமல்லாமல், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கூட 100 மிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. அதுவும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது.


இதற்கு முன்பு 1996ம் ஆண்டுதான் இப்படி மழை பெய்துள்ளது. தொடர்ச்சியாக 3 நாட்களாக 100 மிமீட்டருக்கு மேல் அப்போது மழை பெய்திருந்தது. இன்றும் கூட சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




சென்னையைப் பொறுத்தவரை சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 170.5 மிமீ மழை பெய்துள்ளது. மடிப்பாக்கம் 149, நெற்குன்றம் 139, கொரட்டூர் 136 மிமீ மழை பெய்துள்ளது.


காஞ்சிபுரத்தை விட ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் 100 மில்லி மீட்டருக்கு மேல் அதிக அளவிலான மழை பெய்துள்ளது.  விடிய விடிய விட்டு விட்டுப் பெய்த கன மழையால் சென்னை நகரமே ஏசி போட்டது போல குளுகுளுவென மாறியுள்ளது. மழை பெய்து போது பல இடங்களில் நீர் தேங்கினாலும் மழை விட்ட பின்னர் நீர் வடிந்து விட்டதால் பெரிய அளவில் பிரச்சினை இல்லை.