தமிழ்நாட்டில்.. இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

Manjula Devi
Apr 30, 2025,06:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடை வெயில் தொடங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று மட்டும் கரூர் பரமத்தி, ஈரோடு, வேலூர், திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் வெயில் சதம் அடித்தது.இதனால்  இப்போதே வெயில் கொளுத்துகிறது என்றால், அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என மக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். அதே சமயத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. 


இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 




மே 2 மற்றும் 3 ஆம் தேதியில் தமிழகத்தில் ஒரு இரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 


மே 4ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 


மே 5 மற்றும் 6ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 


மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளது.



மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


மே 2 முதல் 4 வரை, தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 km வேகத்திலும் வீசக் கூடும். 


மே 2 ஆம் தேதி, வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர்  வேகத்திலும், இடையிடையே 35 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.