என்னது.. பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?.. சசிகாந்த் செந்தில் பதிலடி
சென்னை: பாஜக வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நடந்த திமுக இளைஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போது காங்கிரஸை கடுமையாக சாடிப் பேசினார் உதயநிதி ஸ்டாலின். அப்போது பாஜகவின் தொடர் வெற்றிக்கு உண்மையில் காங்கிரஸ் கட்சிதான் உழைத்து வருவதாக, உதவி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு சசிகாந்த் செந்தில் பதில் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள் அறிக்கை:
என்னது.. பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?
அல்லது காலத்திற்கு ஏற்றாற்போல கொள்கையினை மாற்றிக்கொள்ளும் இயக்கங்கள் காரணமா?
1999-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தது யார்?
2002 கோத்ரா கலவரத்தில்
ஆயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் கொல்லப்பட்டபோதும்
வாய் திறக்காமல்
அதே கூட்டணியில் தொடர்ந்தது அதிகாரத்தை அனுபவித்தது யார்?
அது கொள்கை அரசியலா?
அல்லது அதிகாரத்திற்கான பசியா?
அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம்.
ஆனால் தோல்விக்குப் பிறகு
என்ன பேசுவது என்று தெரியாமல் அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளை தாக்குவது
அரசியல் நாகரிகம் அல்ல.
மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்த அரசியல் இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸை விமர்சிக்க, குறைந்தபட்ச அரசியல் அனுபவம் அவசியம்.
கைதட்டலுக்காக பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்… ஆனால் மக்கள் நினைவில் நிற்பது அரசியல் நாகரிகமும் வரலாறும் தான் என்று அவர் கூறியுள்ளார்.