தொடுதிரையில் தொலைந்த நட்பு!

Su.tha Arivalagan
Sep 09, 2026,10:33 AM IST

- ஔவை அ.ர.தீபாரவி, கோவை


படுபாவிக்

கைப்பேசி

உன்னால்

வந்ததே

தொல்லையே!


விடு 

என்றாலும்

மனமோ

கேட்பதே

இல்லையே!


எடுவென 

அழகாக

அடிமையாக்கும்

கொடியவன்

எல்லையே!




துடுப்பில்லா 

ஓடமாய்த்

தோழமைகளைத்

தேடுதுப்

பிள்ளையே!


(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).