மழை நின்ற பின்பும் தூறல் போல

Su.tha Arivalagan
Sep 17, 2026,10:35 AM IST

- ஔவை அ.ர.தீபாரவி


சில 

நினைவுகள் நெஞ்சென்னும் குழிக்குள்ளே புதைத்தாலும் 


பலமுறை நிலைமீறி 

எட்டித்தான் பார்க்கிறதே

என்செய்ய


காற்றும் காதலும் வேறாகுமா வேலியிடத்தான் முடியுமா?


தோற்றே போனாலும் மீண்டும் 

உயிர்தனை ஏற்றும்




முதன் 

முதலாய்ப் 

பூத்த 

கவிதை அதுவே


திரைகள் இட்டாலும் மறைக்க இயலாத காப்பியமே


(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).