ரோஜா பூ கொடுத்து புதிய மாணவர்களை அன்புடன் வரவேற்ற தேவகோட்டை ஆசிரியர்கள்!

Su.tha Arivalagan
Jun 04, 2026,05:37 PM IST
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில், கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளியில் புதியதாக சேர்ந்த மாணவர்களை, மூத்த மாணவர்கள் ரோஜா பூ வழங்கி அன்புடன் வரவேற்றனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளி வாழ்க்கையைத் தொடங்கினர்.



இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையேற்றார். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி, முத்துமீனாள் உள்ளிட்டோர் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மேலும், ஏராளமான பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

புதிய மாணவர்களுக்கு இனிமையான மற்றும் நட்புறவான சூழலை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.