தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலேயே வைத்தியம் பார்க்க குடும்பத்தினர் முடிவு

Su.tha Arivalagan
Nov 12, 2025,11:19 AM IST

மும்பை: முன்னணி நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.


மும்பை, ப்ரீச்கேண்டி மருத்துவமனை டாக்டர் பிரதீத் சாம்தானி இது குறித்து கூறுகையில், "தர்மேந்திரா காலை 7.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரை வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதால், அவர் வீட்டிலேயே சிகிச்சை பெறுவார்" என்று தெரிவித்தார்.




கடந்த சில வாரங்களாக தர்மேந்திரா அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரவிய நிலையில், அவரது மகள் ஈஷா தியோல் மற்றும் மனைவி ஹேமாமாலினி ஆகியோர் அதனை மறுத்தனர். ஈஷா தியோல் கூறுகையில், "என் தந்தை நலமாக இருக்கிறார், குணமடைந்து வருகிறார். அப்பாவின் விரைவான குணமடைதலுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்தார்.


தர்மேந்திராவின் மகன் சன்னி தியோலின் குழுவினரும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், "சார் சிகிச்சை பெற்று நலமடைந்து வருகிறார். அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்" என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.