பெண் என்பவள்!!!!
Jul 13, 2026,01:01 PM IST
- டிலாணி ஸ்ரீதரன்
விழிகளில் சொரியும் கண்ணீரின் சொந்தமா?
அடிகளையும் ஏற்கும் பொறுமையின் சின்னமா?
அழிவுகளையும் தாங்கும் சக்தியின் திண்ணமா?
உயிர்களை உமிழும் உதிரத்தின் உறைவிடமா?
எதையும் சகித்துத் துடிக்கும் இதயமா?
உதையும் வாங்கும் கணவனின் கிண்ணமா?
பாதையையும் சீராக்கும் வாழ்வின் முன்னேற்றமா?
போதையையும் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமா?
உபாதையிலும் உயிரோட்டமான உலாவும் இயந்திரமா?
வித்தைகள் பல கற்று விற்பனையாகும் வீரியமா?
துளிரும் மழலைகளை கருவறுப்பது நியாயமா?
வாழ்வை சிதைத்து எதிர்காலத்தை அழிப்பது மூடர் கூட்டமா?
தேகத்தை வதைத்து பிறவியை பறிக்கும் அற்பர்களின் இராச்சியமா?
பேதை இவளை புரிந்து கொண்டாள் குற்றமா?
மலர்களின் மணத்தை
மனதால் முகர்ந்தால் பாவமா?
மாதர்களின்றி இவ்வுலகமில்லை என்பதுதான் புரியுமா?????