குளத்தில் வட்ட இலையுடன் தாமரை மலரும்.. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும்: தமிழிசை சௌந்தரராஜன்

Manjula Devi
May 05, 2025,06:57 PM IST

சென்னை: அதிமுக, பாஜக கூட்டணியில் ஆட்சி அமைக்காது என எடப்பாடி பழனிச்சாமி கூறிவரும் நிலையில், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என சூசகமாக கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.



அதிமுக- பாஜக கூட்டணியை அறிவித்தபோதே 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் இதனை மறுத்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் அதிமுகவே ஆட்சி அமைக்கும் என கூறினார். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கும் என டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சூசமாக பேசியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,




நிச்சயமாக தமிழகம் வளர்ச்சிப் பாதைக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் இருவரும் இருந்தோம் என்றால் எங்களை சரியாக அடையாளம் கண்டு கொள்ளுங்கள். நான் ஏற்கனவே சொன்னது போல், குளத்தில் வட்ட  இலையுடன் தாமரை மலரும்‌. ஆட்சியில் இரட்டை இலையுடன் தாமரை மலரும். ஆக அப்படிப்பட்ட சூழ்நிலை வந்தால் தான் நாம் எல்லோரும் இலை போட்டு சரியாக சாப்பிட முடியும் என கூறினார்.