விதையின் கனவு!
- க .யாஸ்மின்சிராஜீதீன்
விதையில் தொடங்கி விருட்சமாகி
உலக உயிர்களுக்கெல்லாம் பயன்பட வேண்டும் என
கனவு கண்டேன்......!!!!
அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டாயே மனிதா..!!!
விதையின் கனவு கனவாகவே ஆகிவிட்டால்
கனவு காண உயிர்கள் உலகில் இல்லாமல் போய்விடும் என்பதை ஏன் மறந்தாய்....!!!
உன் உயிர்வளிக்கு மூன்று விருட்சம் தேவை என அறிவியல் எடுத்தியம்புவதை
நீ அறியவில்லையா...!!!!.
தெரிந்தும் நமக்கென்ன என
கடந்து செல்கிறாயா... !!!
விதை உறங்குவதில்லை
முளைப்பதற்கு முட்டி
மோதிக்கொண்டிருக்கிறது
மண்ணுக்கடியில்... !!!!
விருட்சம் விதையின் கனவு ... !!
வாழ்க்கை மனிதனின் கனவு..!!!
கனவு காணுங்கள் விருட்சமாவீர்கள் ..!!!
இப்படிக்கு விதை....!!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)