பீகார் சட்டசபைத் தேர்தல்.. இன்று மாலை தேதியை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

Su.tha Arivalagan
Oct 06, 2025,10:38 AM IST
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளது. 

இன்று மாலை 3  மணிக்கு டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் உள்ளிட்ட 3 ஆணையர்களும் இணைந்து தேதியை அறிவிப்பார்கள். சமீபத்தில் பீகாருக்குச் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேசினார்கள். வரவிருக்கும் தேர்தல் குறித்து கருத்துக்களைக் கேட்டனர். 





அப்போது அரசியல் கட்சிகள் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தன. சத் பண்டிகைக்குப் பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டன. இது அதிக வாக்காளர்கள் பங்கேற்க உதவும் என்று அவர்கள் தெரிவித்தனர். தேர்தலை குறைந்த கட்டங்களில் நடத்தவும் வலியுறுத்தின. பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. பீகார் சட்டமன்றத்தில் மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் சட்டசபைத் தேர்தல் எத்தனை கட்டங்களில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒன்று அல்லது இரண்டு கட்டங்களில் நடத்த வேண்டும் என்று பாஜக கோரியுள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேர்தலை இரண்டு கட்டங்களுக்கு மேல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. பெரும்பாலான கட்சிகளும் இதே கோரிக்கையைத்தான் வலியுறுத்தியுள்ளன.