மகத்தான மாற்றம்!
Jun 26, 2026,03:38 PM IST
- புலவர் ப. ஈஸ்வரநாதன்
கொஞ்ச காலம்
இருப்போம்
மறவாதே
இருக்கும் காலம்
நிம்மதியை
இழக்காதே
நிறைய இருக்கிறது
என்றே ஆடாதே
எதுவும் இல்லை
என்பதால் வாடாதே
ஒன்றை தொலைத்தபின்
நின்று தேடாதே
மதிக்காதார் வாசலுக்கு
எப்போதும்
போகாதே
உதவி செய்தவர்களை
என்றென்றும்
மறக்காதே
உண்மையான
உறவுகளை ஒருபோதும்
ஒதுக்காதே
மகத்தான மாற்றம் வாழ்வில் உண்டு
இன்றும் என்றும்
மனம் தளராதே
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)