அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
Sep 07, 2026,12:40 PM IST
- சுதந்திரக்கவி புலவர். ப.ஈஸ்வரநாதன்
அறியாமை எனும் இருளை அகற்றும் பேரொளியே...
அன்பெனும் ஆயுதத்தால் செதுக்கும் சிறந்த ஆசானே...!
ஒழுக்கத்தையும் நற்ப்பண்பையும் நன்றாய் கற்றுத் தந்தவரே...
எங்கள் கனவுகளுக்கு இன்றும் சிறகுகளாய் இருந்தவரே...
தன்னம்பிக்கை என்ற தீபத்தை இதயத்தில் ஏற்றியவரே...!
வாழ்க்கைப் பாதையை வழிகாட்டிய கலங்கரை விளக்கே ...
வெற்றி வாசலைத் திறந்திட்ட திடமான திறவுகோலே...!
ஆசிரியர் அர்ப்பணிப்பை இன்றும் என்றென்றும் மறவாதிருப்போமே...
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)