வீதியும் கடலாகும்!

Su.tha Arivalagan
Nov 08, 2025,10:52 AM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன் 


வீதியும் கடலாகும்

மழை நீரும் தேங்கினாலே... 

நீருக்கு வழிகாட்ட மறந்தது யாரோ.... 

பொறுப்பை தட்டிக் கழிக்கும் பொறுப்பாளிகளோ.... 

இது யார் செய்த பிழையோ

மழை நீருக்கு இழைத்த அநீதியோ.... 

பாதுகாக்கப்பட  வேண்டிய அமிர்தம்..... 

வீணாகி சேராவதேனோ.... 




வாகனங்கள் நீச்சலடித்து கடக்க வேண்டிய சூழல்தானே.... 

வீட்டுச் சுவர்களிலே வண்ணக் கோலமிட்டுச் செல்லும் தூரிகையானதே....... 

வீதியில் கடலாட 

வாகனங்கள் அதன்மீதாட... 

அலைகள் வாசலை 

தொட்டு விளையாட.... 

சுவர்கள் வண்ணமயமாக

உரிமையாளர் கண்டு மனம் நோக..... 

என்று தீரும் இந்த நிலையோ

வாக்களிக்கும் போது  நாம் செய்த தவறோ..... 

சேவை மனம் கொண்ட

உறுப்பினரை தேர்ந்தெடுப்பீரே... 

ஊரும் நாடும் சிறக்கச்செய்வீரே... !


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)