முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
புனே: முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடல்நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் உடல்நலக்குறைவால் மஹாராஷ்டிரா, லத்தூரில் தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 91. இவர் தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக பதவி வகித்திருந்தார். 2004 முதல் 2008 வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2010 முதல் 2015ம் ஆண்டு வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் பதவி வகித்திஓந்தார். 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வர்த்தகத் துறை மற்றும் விமானபப் போக்குவரத்து துறை அமைச்சராகவும் சிவராஜ் பாட்டீல் பதவி வகித்தார்.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.