Poem: கைரேகை!

Su.tha Arivalagan
Jun 23, 2026,03:31 PM IST

கைரேகை பார்த்து எதிர்காலம் சொல்பவன் 

தன் தொழிலை செவ்வனே செய்கிறான்.... 


கைரேகை பார்த்து எதிர்காலம் அறிந்து கொள்ள முயற்சிப்பவன் 

தன் தொழிலின் பொன்னான நேரத்தை இழக்கிறான்.... 


நாளை என்பது நம் கையில் இல்லை 

ஆனால் நாளைய நாள் பூக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.... 




பிறகு ஏன் நாளை நம்மால் சிறப்பாக வாழமுடியும் என்ற நம்பிக்கை 

நம் மேல் நமக்கே இல்லாமல் போனது.... 


தன்னம்பிக்கை இருந்தால் ரேகை உள்ள கையாலே சாதனை பல புரிந்து 

அழியாரேகைபோல நம் வாழ்க்கையை  பதிக்க முடியும் வரலாற்று ஏட்டிலே... 

முடியும் என்பது நம்பிக்கை ஆனால்.. 


விரல்கள் பத்தும் மூலதனம் 

ஆனால்.. 

வெற்றியை நிர்ணயிக்கும் ரேகை உன் கையில்

வெற்றி தாண்டவம் ஆடும்........ 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)