நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும்.. Instant புளியோதரை மசாலா பொடி!
- ஜெனிட்டா ரீனா
தொலைதுர பயணம், சுற்றுலா, உடனடி உணவு தயாரிப்பு என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு சட்டென வருவது கலவை சாதம். அதிலும் நினைக்கும் போதே வாயில் எச்சியூறும் சாதம் புளி சாதம். இந்த உடனடி புளியோதரை மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
6 மாதங்களுக்கு மிகாமல் கெட்டுப்போகாமல் பாரம்பரிய புளியோதரை மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
புளி- எலுமிச்சை பழ அளவு
கொத்தமல்லி விதை( தனியா)-25 கிராம்
துவரம்பருப்பு-15 கிராம்
கடலைப்பருப்ப-15 கிராம்
உளுந்தம் பருப்ப- 15 கிராம்
காய்ந்த மிளிகாய்-10 ( காரத்திற்கேற்ப)
பூண்டு- 1
பெருங்காயம்- தேவைக்கேற்ப
வெந்தயம்- 10 கிராம்
சீரகம்-5 கிராம்
கல் உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை -கைப்பிடி அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியில் சிறிது நல்லெண்ணைய் ஊற்றி ஒவ்வொன்றாக மிதமான சூட்டில் வறுத்தெடுக்க வேண்டும்
பின் சிறிது நேரம் ஆறியவுடன் மிக்சியில் சிறிது கொரகொரப்பாகஅரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த மசாலா வை ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
தேவைப்படும் போது நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடான சாதத்தில் புளியோதரை மசாலா சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
வேண்டுமெனில் சிறிது தாளிப்பு( நல்லெண்ணெய், கடுகு , கறிவேப்பிலை) செய்து சாப்பிட்டால் நாவில் அறுசுவை நடனமாடும்.
(டி. ஜெனிட்டா ரீனா, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர்)