சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !

Su.tha Arivalagan
Aug 14, 2026,10:23 AM IST

- சீர்காழி சிவ.ஆ. மலர்விழி ராஜா 


பாஞ்சாலங் கோட்டையிலே பார்போற்ற வாழ்ந்தவனே !


வீரத்தின் விளைநிலமே வீரபாண்டிய கட்டபொம்மனே !


மண்ணை காக்க மக்களுக்காக வாழ்ந்தவனே  !


பாரதத்தின் பெருமை 

காக்க பிறந்தவனே !


காலத்தை வீரத்தால் கடந்த கட்டபொம்மனே   !


வரிகேட்ட வெள்ளையனை வணங்கமறுத்த தீரனே !


வாள்பேச்சின் வீர ஒலி

வான்வரையில் தொட்டவனே !


அஞ்சாத நெஞ்சம் கொண்ட அதிவீரபாண்டியனே !


சங்கிலியால் பிணைத்தாலும் சுதந்திரகாற்றை சுவாசித்தவனே !




தாய்மண்ணின் வீரம் போற்றும் 

தலைமகனே !   


தாழ்ந்திடாமல்  சிங்கமென தன்மானம் 

காத்தவனே !


கயத்தாற்றின் காற்றுகூட

கட்டபொம்மன் கதைசொல்லும் !


தூக்குகயறு முன்னே வந்தும் தோல்வியின்றி

நின்றவனே !


சுதந்திரதாகம் ஒன்றே

சுவாசமென சென்றவனே !


வாழ்க நின் புகழ்

அஞ்சாமையே வாழ்வுஎன.....


அச்சத்தை மடமையாக்கி அறவழியில் 

வாழ்ந்தவனே !


போற்றுகிறேன்  உனது புகழ்வாழ்கவென்று!


அஞ்சாத நெஞ்சமும் 

உறுதியான  தீரமும் கொண்டவனே !


காலங்கள் உள்ளவரை   

கடலலைப்போல  உனது வீரம் போற்றிடுவோம் !


வெல்க வீரம் !

வாழ்க பாரதம் !

வளர்க செந்தமிழ் !