சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
- கவிஞர் சு. சண்முகம் (சொகோ), புதுப்பேட்டை
சும்மா கிடைத்ததா சுதந்திரம்?
சுகமாய் சுற்றித் திரிவோரே!
இன்று மட்டுமாயின் சற்று
இன்னலில் அடிபட்டு மாண்டோரை
ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
ஓராயிரம் மறியல்கள் போராட்டங்கள்
அருகிலுள்ள முதியோர் என்பது
அகவை கடந்தோரை இன்றேனும்
சந்தித்து அனுபவித்த இடர்களை
சற்றேனும் செவிமடுப்பீர்! அறிவீர்!
வாய்கிழிய பேசும் வாலிபர்களே!
வாய்மூடி ஊமையாக்கப்பட்ட முன்னோர்
அணுகியே அனுசரணையாய் ஓரிரு
அசைபோடு நினைவில் இளைப்பாருங்கள்
சட்டம்பேசும் சண்டியரே!
சுதந்திரச் சந்தேகங்களை நூலகத்தில் தேடிடுவீர்!
அணைத்தே அன்றாடம் உறங்கிடும்
அலைபேசியிலேனும் அறிந்திட விழைவீர்!
இளைஞர், இளைஞிகளே! மகிழ்வுருநாளின்று
இந்நாளை தொலைத்திடாது இருக்கவே!
ஆழ்ந்தறிவீர்! நற்செயல் செய்வீர்!
ஆனந்தவாழ்வுக்கு வழிவகை தேடுவீர்!
அடிமைச்சங்கிலி உடைத்தெறிய உத்வேகமாய்
ஆங்கிலேயர் அதிர்ந்திடவே! பயந்திடவே!
தோள் நிமிர்த்தோரை இந்நாளில்
தொழுது வணங்கியே போற்றிடுவோம்.