நீண்ட தாமதத்திற்குப் பிறகு.. இந்தியாவுக்கு வரவுள்ள 6 அமெரிக்க அப்பாச்சே தாக்குதல் ஹெலிகாப்டர்கள்
டெல்லி: நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு, 6 அமெரிக்க Apache தாக்குதல் ஹெலிகாப்டர்களின் முதல் தொகுதி இந்த மாதம் ராணுவத்திற்கு வர உள்ளது.
வானில் உள்ள டாங்கிகள் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டர்கள், பிப்ரவரி 2020 இல் அமெரிக்காவுடன் போடப்பட்ட ரூ.5,691 கோடி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஹெலிகாப்டர்கள் வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முக்கிய காரணம், உற்பத்திப் பொருட்கள் கிடைப்பதில் இருந்த சிக்கல்களே. போயிங் நிறுவனம் தயாரித்த முதல் Apache ஹெலிகாப்டர்கள் ஜூலை 15 ஆம் தேதிக்குள் வந்து சேரும். அடுத்த மூன்று ஹெலிகாப்டர்கள் நவம்பரில் வரும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய விமானப்படை, ஏற்கனவே அமெரிக்காவுடன் 2015 செப்டம்பரில் போட்ட ரூ.13,952 கோடி ஒப்பந்தத்தின் கீழ் 22 அப்பாச்சே ஹெலிகாப்டர்களை வாங்கி உள்ளது. தற்போது வாங்கவுள்ள 6 ஹெலிகாப்டர்களும் கூடுதலாகச் சேரவுள்ளன. இதில் ஒரு ஹெலிகாப்டர் கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி லடாக்கில் உள்ள கர்துங் லா அருகே தரையிறங்கும் போது சேதமடைந்தது. இந்த ஆண்டுக்குள் ஆறு ஹெலிகாப்டர்களும் வந்து சேரும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.
அப்பாச்சே ஹெலிகாப்டர்களில் ஸ்டிங்கர் ஏவுகணைகள், ஹெல்பயர் லாங்போ ஏவுகணைகள், துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக Apache ஹெலிகாப்டர்கள் வரவுள்ளன.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படும் Apache ஹெலிகாப்டர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இந்திய விமானப்படை ஏற்கனவே 22 Apache ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறது. தற்போது ராணுவத்திற்கு 6 ஹெலிகாப்டர்கள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் ராணுவத்தின் தாக்குதல் திறன் அதிகரிக்கும்.
DRDO உருவாக்கியுள்ள புதிய QRSAM ஏவுகணை அமைப்பை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.36,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பு எதிரிகளின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் drones-களை 30 கி.மீ தூரம் வரை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இது நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பை மேலும் வலுப்படுத்தும். மே 7-10 தேதிகளில் நடந்த Operation Sindoor நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் அனுப்பிய drones மற்றும் ஏவுகணைகளை இந்த அமைப்பு வெற்றிகரமாக தடுத்தது குறிப்பிடத்தக்கது.