தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
- இரா. மும்தாஜ் பேகம்
வாழ்க்கை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்க ஆயிரம் உறவுகள் அருகில் இருக்கத் தேவையில்லை.நமக்கு உண்மையாக இருக்கும் ஒரு உறவு இருந்தாலே போதும்.
கோபத்தில் குரலை உயர்த்தக் கூடாது. வார்த்தைகளின் தரத்தை உயர்த்த வேண்டும். மலர்கள் மலர்வது மழையால் மட்டுமேயன்றி இடியாலோ மின்னலாலோ அல்ல.
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால் வேறு எந்த உறவும் நமக்கு தேவையில்லை.
தங்கத்தில் செய்த தேராக இருந்தாலும் தேவை முடிந்ததும் ஓரமாக தான் நிறுத்தி வைப்பார்கள் அது போல தான் சில உறவுகளும்.
பொய் பேசினால் மட்டுமல்ல, சில நேரங்களில் உண்மை பேசினால் கூட உறவுகள் உடைந்து போகும்.
செரிக்காத உணவை சேர்த்தால் அது உடலுக்கு கேடு தரும் அதுபோல, நிலைக்காத உறவை நினைத்தால் அது உள்ளத்திற்கு கேடு தரும்.
தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பிற்கும் சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம்இருக்கும்.
மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், கோபத்தில் உள்ள அன்பையும், யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான உறவு.
(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)