அனுபவம் பெற.. பல தோல்விகளும் சில துரோகிகளும் தேவை!
- இரா. மும்தாஜ் பேகம்
அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக் கொடுக்க முடியாது அதற்கு பல தோல்விகளும் சில துரோகிகளும் தேவை.
கடவுள் வரமெல்லாம் தரமாட்டார். சந்தர்ப்பம் தான் தருவார் அதை வரமாக்குவதும் சாபமாக்குவதும் நம் கையில் தான் இருக்கிறது.
இறைவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல நம்மைப் போல் சாதிக்க துடிக்கும் நல்லவர்களை மட்டுமே.
கடவுளை பார்த்ததில்லை என்று சொல்லாதீர்கள் நம் கஷ்டத்தில் நமக்கு கருணையோடு உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுள்தான்.
பிரார்த்தனை செய்பவர்கள் கடவுள் அருகில் போகலாம். ஆனால் சேவை செய்பவர்கள் அருகில் கடவுளே வருவார்.
எந்த இடத்தில் நம்மை வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கிறார்களோ அதே இடத்தில், அவர்கள் முன் இறைவன் நம்மை உயர்த்தி வைப்பான்.
விட்டுக்கொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால் நாம் விட்டுக் கொடுக்கும் அனைத்தும் ஒரு நாள் நம்மை தேடி வரும்
பொறுமை, சகிப்புத்தன்மை இந்த இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு மிஞ்சிய நற்குணங்கள் இல்லை.
(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)