ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான போர்.. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போராட்டம் நடத்தியுள்ள நிலையில், அதற்கு தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழ்நாட்டில் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இதுகுறித்தும், திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும் திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
எங்கள் தேர்தல் அறிக்கை குழு மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. தமிழகத்தை அடுத்த 50 ஆண்டுகால வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான பல புதுமையான திட்டங்களை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் போர் தமிழகத்திற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையிலானது. இன்னும் வெளிப்படையாகச் சொல்லப்போனால், இது ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையிலான சித்தாந்தப் போர்.
தி.மு.க அரசு பதவியேற்ற முதல் நாளிலிருந்தே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், குற்றப் பதிவுகளை பார்த்தால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும். உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் மிக மோசமான குற்றங்கள் 1,500 முதல் 1,800 வரை பதிவாகின. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தமிழகம் பாதுகாப்பான மாநிலமாகவும், சென்னை மிகவும் பாதுகாப்பான நகரமாகவும் திகழ்கிறது.
தமிழகக் காவல்துறை மிகச் சிறந்த முறையில் பணியாற்றி வருகிறது. எதிர்க்கட்சிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றார் அவர்.