May 1: உலக உழைப்பாளர் தினம்.. முயற்சியே வெல்லும்!
- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
இன்று உலக உழைப்பாளர் தினம்!
அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்!
"விழுமின்; எழுமின்; இலக்கை அடையும் வரை நில்லாது உழைமின்!" – சுவாமி விவேகானந்தர்
"வையத் தலைமை கொள்! பெரிதினும் பெரிது கேள்!" – மகாகவி பாரதியார்
"கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு!" – ஔவையார்
தயக்கம் என்பது தோல்வியின் அறிகுறி!
முயற்சி என்பது வெற்றியின் அறிகுறி!
உழைப்பின் வேர்கள் கசப்பாக இருக்கலாம், ஆனால் அதன் கனிகள் மிக இனிப்பானவை!
சிகரம் உன் உயரம்! உன்னில் உயர்ந்து நில்!
நீ உலகிற்கு ஒளியாக இரு!
யாரையும் பார்த்து வியக்காதே; யாரையும் பார்த்து மிரளாதே!
எதிர்த்து நின்று வெற்றி பெறக் கற்றுக்கொள்!
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்."
இன்று உன்னுடைய முயற்சியை "வீண் முயற்சி" என்று சொல்பவர்கள்,
நீ சாதித்த பிறகு, அதையே "விடாமுயற்சி" என்று போற்றுவார்கள்.
நீ யார் என்று உலகுக்கு நிரூபி!
உன் நோக்கம் விரைவில் நிறைவேறும்.
கடல் அலைகள் கரையில் ஆர்ப்பரிக்கும், ஆனால் ஆழ்கடல் அமைதியாக இருக்கும்.
புயலுக்கு முன் அமைதி; பொங்கி எழுந்தால் அதுவே சுனாமி!
இறுதியில் வெற்றி உனதே!!!
(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராக, சிறுகதை, கவிதை, கட்டுரை, வகுப்பறை அனுபவம், நடிப்புத்திறன், பாடல் பாடுதல் போன்ற பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார்.).