Kalaiyarasi Muthuvel Poem: இரவல்!
May 27, 2026,01:20 PM IST
- கவி.கலை
அழுக்கு உடையில்
ஆனந்தமாய் பள்ளி சென்றாலும்
அன்பு அறியப்படவில்லை.
அமுதாய்க் கல்வி கற்று
அளப்பெரிய சாதனை கண்டாலும்
அறிவு அங்கீகரிக்கப்படவில்லை.
திறன்கள் பல கொட்டித்
திணறச் செய்தாலும்
திறமைகள் திடப்படுத்தப்படவில்லை.
இரவல் நகை வாங்கி
இன்முறுவல் பொய்யாக
இதழ் விரிந்தாலும்
இருகரம் விரித்து
இணைந்திடுவார் சிலர்.
இறுமாப்புக் கொண்டு
வாழ்ந்திடுவோர் பலர்.
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன)