Kalaiyarasi Muthuvel Poem: நிழல்!
May 26, 2026,03:47 PM IST
- கவி.கலை
உதவிக்கு அழைத்தும்
உடன் வராத
உறவுகள் மத்தியில்
உதவ முடியாத போதும்
உடன் வருபவள்,
காயப்பட்டு நான்
கலங்கிடும் போதும்
கல்நெஞ்சக்காரியாய்
கணப்பொழுதும்
என்னோடு இருப்பவள் ,
வெறுமையில் நான் இருந்தாலும்
கருமை நிறம் கொண்டு
பொறுமையாய்
என்னருகில் இருப்பவள்.
நான் முன் நடக்க
அவள் பின் நடந்தாலும்
பொறாமையின்றி
நிழல் என்னும் என்னவள்.
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)