Kalaiyarasi Muthuvel Poem: நிழல்!

Su.tha Arivalagan
May 26, 2026,03:47 PM IST

- கவி.கலை 


உதவிக்கு அழைத்தும் 

உடன் வராத  

உறவுகள் மத்தியில்  

உதவ முடியாத போதும்  

உடன் வருபவள்,  

 

காயப்பட்டு நான்  

கலங்கிடும் போதும்  

கல்நெஞ்சக்காரியாய்  

கணப்பொழுதும் 

என்னோடு இருப்பவள் , 


 


வெறுமையில் நான் இருந்தாலும்  

கருமை நிறம் கொண்டு  

பொறுமையாய் 

என்னருகில் இருப்பவள். 

 

நான் முன் நடக்க  

அவள் பின் நடந்தாலும்  

பொறாமையின்றி  

பெருமை பாராட்டும்  

பெருந்தன்மைக்காரி  

 நிழல் என்னும் என்னவள்.  


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)