ஆசை

Su.tha Arivalagan
Apr 04, 2026,02:03 PM IST

- கவி.கலை 

 

அரவணைப்பு வார்த்தையில் மட்டுமல்லாமல் 

அரவணைக்கும் கரமாகிட ஆசை! 

ஆதரவு வெறும் சொல்லில் மட்டுமல்லாமல் 

செயலில் வெளிப்பட ஆசை! 

இன்பம் முகத்தில் மட்டும் மலராமல்  

இகமெல்லாம் மலர்ந்திட ஆசை !  


ஈரம் நிலத்தில் மட்டும் எதிர்பாராமல்  

மனதிலும் நிறைந்திட ஆசை? 

உறவுகளைத் தினம் ஏங்கித் தேடாமல் 

உண்மை உறவாகிட ஆசை !            

ஊமையாக இருந்து விடாமல்  

உறுதியாக உரைத்திட ஆசை !  


எண்ணிய தெல்லாம் எனதாக இல்லாமல்  

எளியவருக்காய் வழங்கிட ஆசை! 

ஏமாற்றம் பல நான் கண்டாலும்                     

ஏற்றம் காணும் மனம் பெற ஆசை!  




ஐயம் இருந்தாலும் அகமெல்லாம்  

உயர்வான எண்ணம் நிலைபெற ஆசை ! 

ஒடுக்கும் கைகள் ஒதுக்கினாலும் 

ஓரம் ஒதுங்கிய ஓடமாகாமல்  

ஓங்கிய கைகளாய் நீதி நிலைநாட்டிட ஆசை!


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)