Kavi Kalai poem: விதை
Apr 18, 2026,03:48 PM IST
- கவி கலை
வேர் முளைக்கும் வேளையில்
என் வேதனை வெளிவரவில்லை,
தளிர் தழைக்கும் நாளில் - என்
தலை தூக்கியதில்லை,
இலை துளிர்க்கும் நொடியில்- என்
இறுமாப்பு துளிர்க்கவில்லை,
கிளை விரியும் பொழுதில் - என்
கிளர்ச்சி தெரியவில்லை,
பூப் பூக்கும் அழகில்-என்
புன்னகை அறியவில்லை,
காய் காய்க்கும் காலத்தில்-என்
கரிசனை எடுபடவில்லை,
மண்ணோடு மண்ணாகக் கிடந்தாலும்
மறைந்தும் மடியாத விதை நான்.
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)