பாக்யராஜ் என்கிற பன்முககலைஞர்!
- பாஸ்டனிலிருந்து பாரதிராஜன்
பாரதிராஜாவின் முக்கிய சீடர்களில் முதன்மையானவர் கே. பாக்யராஜ். ராதிகாவும் பாக்யராஜும் பேசும் வசனம் அப்போது மிக மிக பிரபலம்.
அதே போல பத்தினி யார் என்ற ஒரு கேள்விகேட்டு நான்கைந்து பெரியவர்களிடம் கேட்டு படுத்தியவர். அந்த வசனம் லாஜிக்கலாகவும் சிலாகிக்கப்பட்டது.
இதுநம்ம ஆளு படத்தில் முதல் முறையாக இசை அமைத்தவர். பழக அமைதியானவர். தூறல் நின்னுப்போச்சு, சின்னவீடு அருமையான படங்கள். அந்த ஏழுநாட்களின் கடைசி வசனம் செம டச்சிங்.
பாரதிராஜா மறைந்த வடு கூட ஆறவில்லை அதற்குள் குருவுடன் போய்ச்சேர என்ன அவசரம்?
குருவுக்கு நடிகர் திலகத்தின் "முதல் மரியாதை " சீடருக்கோ "தாவணிகனவுகள்" ருத்ரா மறக்க முடியாத படம். கெளதமி, லஷ்மி, டெல்லிகனேஷ் காமெடி கலந்த படம்.
மறக்க முடியாத மனிதர்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)